ஆமிர் கானின் பிறந்தநாள் கொண்டாட்டம்

ஹிந்தி நடிகர் ஆமிர் கான், மும்பையில் 51ஆவது பிறந்த நாளை தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை கொண்டாடினார். அமெரிக்கா சென்றிருந்த ஆமிர் கான், பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காக மும்பைக்கு திங்கள்கிழமை காலை வந்தார். அங்கு அவர், தனது மனைவி கிரண் ராவ் மற்றும் மகனுடன் பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 புதிய திரைப்படமான "தங்கல்' வெற்றியடைய வேண்டும் என்பது மட்டும் எனது விருப்பமல்ல; உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் எனது தாயார் முன்பு வசித்த வீட்டை வாங்க வேண்டும் என்பதும் எனது விருப்பம்தான்.
 அந்த வீட்டை வாங்கி, அங்கு எனது தாயாரை அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், தனது முந்தைய நினைவுகளை அவர் நினைவுகூர வேண்டும் என்றும் நான் விருப்பப்படுகிறேன்.


 வாராணசி மிகவும் அழகிய நகரமாகும். அங்கு நான் வீடு வாங்கினால், அதுவும் எனது தாயார் வசித்த வீட்டை வாங்கினால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்றார் ஆமிர் கான். அவரது நடிப்பில் புதிதாக தயாராகி வரும் "தங்கல்' திரைப்படம், வரும் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment