வடிவேலு நடிப்பில் சிம்புதேவன் இயக்கிய சரித்திர காமெடி படமான ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இப்படத்தில் வடிவேலுவின் வசனங்களும், முகபாவனைகளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
இப்படத்தை சங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்தி பரவி வருகிறது.
இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக வடிவேலுவே நடிக்கவிருப்பதாகவும், சிம்புதேவனே இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இம்முறை, சங்கருடன் இணைந்து லைக்கா நிறுவனமும் இப்படத்தை தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் எனவும் நம்பப்படுகிறது.
லைக்கா நிறுவனம் தற்போது ரஜினி நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ‘2.ஓ’ படத்தை தயாரித்து வருகிறது. இதுமட்டுமில்லாமல், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘எனக்கு இன்னோரு பேர் இருக்கு’, விஜய் ஆண்டனி நடிக்கும் ‘எமன்’, கமல் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படம், சசிகுமார் நடிக்கும் புதிய படம் என கோலிவுட்டில் தனி முத்திரை பதித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை சங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்தி பரவி வருகிறது.
இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக வடிவேலுவே நடிக்கவிருப்பதாகவும், சிம்புதேவனே இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இம்முறை, சங்கருடன் இணைந்து லைக்கா நிறுவனமும் இப்படத்தை தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் எனவும் நம்பப்படுகிறது.
லைக்கா நிறுவனம் தற்போது ரஜினி நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ‘2.ஓ’ படத்தை தயாரித்து வருகிறது. இதுமட்டுமில்லாமல், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘எனக்கு இன்னோரு பேர் இருக்கு’, விஜய் ஆண்டனி நடிக்கும் ‘எமன்’, கமல் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படம், சசிகுமார் நடிக்கும் புதிய படம் என கோலிவுட்டில் தனி முத்திரை பதித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment